டெல்லியில் குண்டுவெடிப்பு அதிர்ச்சி அடங்குவதற்குள் புதிய பரபரப்பு

Update: 2024-10-22 09:13 GMT

டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், நள்ளிரவில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இது போலி எனவும் தெரியவந்துள்ளது. போலியான வெடிகுண்டு மிரட்டல் விட்ட மர்மநபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தால் பள்ளியின் சுவர், அருகில் உள்ள கடை மற்றும் கார் சேதமடைந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் அளவில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்