இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் விரட்டி அடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தமிழக மீனவர்களைத் தாக்குவது இல்லை என தெரிவித்திருந்தார். இதனை நம்பி ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடலோரா காவல்படையின் அதிவிரைவு படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி அடித்து விரட்டியுள்ளது. இதனை மீனவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.