தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் நியமனம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்த ராஜ கோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்த ராஜ கோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபால் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் உள்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.