திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-09-15 18:56 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பென்னாடத்தில் இருந்து சிமெண்ட் மூட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று, திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் சென்றுள்ளது. 7-வது கொண்டைஊசி வளைவு அருகே சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைச்சரிவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்