போலி நகைகள் கொடுத்து ஏமாற்ற முயற்சி : பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 பெண்கள் கைது

சென்னையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்ற முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-07-03 06:40 GMT
சென்னையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்ற முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அபிராமபுரத்தில் பூங்கொடி மற்றும் நந்தினி என்ற இரண்டு பெண்கள், தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின்களை வைத்துக் கொண்டு, அ​​ங்கே இருந்த மக்களிடம் அடகு கடை எங்கே உள்ளது என கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவசர தேவை என்பதால் நகைகளை நீங்களே வைத்துக்கொண்டு பணம் கொடுத்தால் சில நாட்களுக்குள் நகைகளை மீட்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொல்ல, அவர்கள் நடத்திய விசாரணையில் அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. அவர்கள் இதுபோல் ஏற்கனவே வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்