கருணாநிதி, ஜெயலலிதா இல்லை : புதியவர் தினகரனுக்கு வாய்ப்பளியுங்கள் - தங்கதமிழ் செல்வன்

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்கள் இல்லாத நேரத்தில், புதியவரான தினகரனுக்கு வாய்ப்பு தாருங்கள் என அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் வாக்காளர்களுக்கு வே​ண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-05-11 02:27 GMT
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்கள் இல்லாத நேரத்தில், புதியவரான தினகரனுக்கு வாய்ப்பு தாருங்கள் என அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் வாக்காளர்களுக்கு வே​ண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவைகள் உள்ளதா என்றும், ரேஷன் கடை சரியாக இயங்குகிறதா என்றும் வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் இல்லை என்று பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து, இவை அனைத்தும் முறையாக செயல்பட வேண்டுமானால், அ.ம.மு.க. வுக்கு வாக்களிக்குமாறு தங்கதமிழ் செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்