ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு : வாபஸ் பெற்றார் வழக்கு தொடர்ந்த மாணவர்

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு : வாபஸ் பெற்றார் வழக்கு தொடர்ந்த மாணவர்

Update: 2019-01-22 08:38 GMT
ஜாக்டோ ஜியோ  வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை, மாணவர் கோகுல் வாபஸ் பெற்றார்.  முன்னதாக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இரு நீதிபதிகள் அமர்வில் முறையிட உள்ளதாக மனுதாரர் கூறினார். எனவே, இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மனு வாபஸ் பெற நீதிபதி ராஜா அனுமதித்தார். இதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்