பேட்ட, விஸ்வாசம் வெளியிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-04 19:46 GMT
நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் படங்களை  திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அளித்த புகார் மனுவில், இரு திரைப்படமும் அரசு விடுமுறையில்லாத, நாட்களில்  6 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக ஆன் லைனில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், இது போன்ற தினங்களில் 4 காட்சிகள் திரையிட வேண்டும் என்ற அரசாணை உள்ளதாகவும் கூறியுள்ளார். அதையும் மீறி 6 காட்சிகள் திரையிட இருப்பது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின், அங்கீகாரத்தை ரத்து செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து, 6 காட்சிகளுக்கு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்