161 டார்கெட்.. திண்டுக்கல்லுக்கு டஃப் கொடுத்த திருச்சி

Update: 2024-07-07 04:45 GMT

டி.என்.பி.எல். கிரிக்கெட் 2ம் நாள் ஆட்டத்தில், திருச்சி அணியை, 16 ரன்கள் வித்தியாசத்தில், திண்டுக்கல் அணி வீழ்த்தியது.

டி.என்.பி.எல். இரண்டாம் நாள் ஆட்டமானது, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 160 ரன்களை குவித்தது. இதனையடுத்து, 161 ரன்களை இலக்காக கொண்டு களத்தில் இறங்கிய திருச்சி அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்