குடும்பத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்யப்போகும் பிரியங்கா காந்தி

Update: 2024-10-22 12:22 GMT

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை தன் குடும்பத்தினரோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பதிவில், வயநாடு மக்களின் சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். அவரை விட சிறந்த பிரதிநிதியை தன்னால் கற்பனை செய்ய முடியாது எனவும், நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்