நாடே பற்றியெரிந்த பாலியல் தொல்லை விவகாரம்... ராகுலுடனான மீட்டிங்.. பகீர் கிளப்பிய பிரிஜ் பூஷன்

Update: 2024-09-07 07:18 GMT

வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்தது குறித்து, மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும் பாஜக பிரமுகருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் கருத்து தெரிவித்துள்ளார்...

பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னைக் கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கிய போது இதன் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்று தான் கூறியிருந்ததாகவும், குறிப்பாக இதற்குப் பின்னால் காங்கிரஸ் தலைவர்களான பிரியங்கா, ராகுல், பூபிந்தர் ஹூடா, தீபேந்தர் ஹூடா ஆகியோர் இருப்பதாக தான் தெரிவித்ததாகவும் பிரிஜ் பூஷன் சரண் சிங் குறிப்பிட்டுள்ளார். இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிகழ்ந்த தினத்தன்று தான் டெல்லியிலேயே இல்லை என நிரூபணமாகும்போது அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஹரியானாவின் மகள்களை தாங்கள் அவமானப் படுத்தவில்லை என்றும், பூபிந்தர் ஹூடா, தீபேந்தர் ஹூடா ஆகியோர் தான் அவர்களை அரசியலுக்காக பயன்படுத்தி அவமானப்படுத்தி விட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்