`தேவர் ஜெயந்தி... தீபாவளி' - தவெக-க்கு புதிய சிக்கல் - அப்செட்டில் விஜய்

Update: 2024-09-25 13:24 GMT

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி, விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல் துறை தரப்பில் பதில் தெரிவிக்கப்படாத நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரத்தில், தேவர் ஜெயந்தி விழா அடுத்த மாதம் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கு பாதுகாப்பு பணிக்காக விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 31ம் தேதி தீபாவளிக்கு முன்னதாக மாநாடு நடந்தாலும், சனி, ஞாயிறுகளில் போக்குவரத்தை சரிசெய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு தீபாவளி போக்குவரத்து பாதிப்பு குறித்தும் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் போலீசார் மவுனம் காத்து வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்