"காங்கிரசின் தவறான கொள்கையால் சீரழிவு" - பிரதமர் மோடி

Update: 2024-09-28 16:19 GMT

ஜம்முவில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை என்ற பிரதமர், காஷ்மீர் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இதே நாளில்தான் பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்த பிரதமர், எதிரியின் எல்லைக்குள்ளேயே சென்று இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்று உலகுக்கு பறையாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். நமது தலைமுறையை சீரழித்த மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கே இருப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இந்தியா விடுதலை பெற்றது முதல் காங்கிரசின் தவறான கொள்கைகள் மக்களுக்கு சீரழிவையே ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்