அரூர் அருகே முள்ளங்கி அறுவடை செய்து கொண்டிருந்த விவசாய பெண்களிடம் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.
மொரப்பூர் பகுதியில், முள்ளங்கி தோட்டத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த விவசாய பெண்களிடம் விவசாயி போலவே சகஜமாக பேசி, வாக்கு சேகரித்தார். அப்போது விவசாய பெண்களிடம் புகைப்படம் எடுத்தும் மகிழ்வித்தார். அப்போது
அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.