ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றை பனைமரம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக்கூடாது எம சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-10-24 10:27 GMT

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது

என எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் எந்த ஒரு பொய்யான பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒற்றை பனைமரம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு அன்புடன் கோரிக்கை வைபதாக கூறியுள்ளார். திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டம், ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்