சீமானுக்கு எதிர்பாரா அதிர்ச்சி - கூண்டோடு எதிராக திரும்பிய நாம் தமிழர் நிர்வாகிகள்

Update: 2024-10-02 04:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும், கட்சியின் எந்த பொறுப்பாளரையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்