அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை - மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

Update: 2023-11-21 07:13 GMT

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை - மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆவின், பால் பாக்கெட்டுகளில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றை, அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தனது எக்ஸ் தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் பிரத்யேக பாக்கெட்டுகளில் தான் இருக்கும். ஆனால், அறிக்கையில் பெட் கலனில் பால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை, என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்காகவும், வெளி மாநில நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆதாயத்திற்காகவும், அண்ணாமலை இவ்வாறு செய்வதாக கருதுகிறோம் என்றும் தரமான ஆவின் பால் விநியோகத்தில் உறுதியாக உள்ளோம்என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்