தன் கையால் உணவூட்டிய குழந்தை... சற்றும் எதிர்பாராமல் பூரித்த அமைச்சர் பொன்முடி

Update: 2024-07-18 10:37 GMT

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு பள்ளியிலிருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடிக்கு சிறுமி ஒருவர் உணவூட்டி மகிழ்ந்தார்... மாணவ மாணவிகளுக்கு தனது கைகளால் அமைச்சர் பொன்முடி உணவு பரிமாறி ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுக்கு உணவூட்டி தானும் உணவுண்டார்... அப்போது அமைச்சரின் அருகில் அமர்ந்திருந்த சிறுமி ஒருவர் அமைச்சர் பொன்முடிக்கு உணவூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...

Tags:    

மேலும் செய்திகள்