"யாராக இருந்தாலும் முதல்வர் ஆக்சன் எடுப்பார்" - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு | MK Stalin

Update: 2024-09-16 12:36 GMT

சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் கட்டிட திறப்பு விழா, தங்கும் விடுதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சங்கத்தின் கட்டிடத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசு செயல்படுகிறது என்றும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் யாராக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்