``திமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவருக்கு மிரட்டல்..?’’ - புகார்

Update: 2024-10-10 05:46 GMT

திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் தன்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பதாக கூறி ஊராட்சி தலைவர் பெண்களுடன் வந்து பி.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக வீராசாமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், திடீரென அங்கிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்