காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு - பதற்றத்தில் குமரி

Update: 2024-09-24 09:56 GMT

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அரியவகை மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பெரும்பாலான நிர்வாகிகள், மணல் அள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இல்லாவிட்டால், கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறும் நாளில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்