முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்திய ஈபிஎஸ் | edappadi palanisamy

Update: 2024-09-19 06:43 GMT

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்...தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்று தேர்தல் வாக்குறுதி தந்த திமுக,தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொகுப்பில் 20 ஆயிரம் இடங்களை நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6 ஆயிரத்து 244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்துள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்...போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு முதல்வர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்