எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள்.. உச்சநீதிமன்றம் புதிய அறிவுறுத்தல்

Update: 2023-11-09 11:50 GMT

 அதன்படி, எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி

தேவைக்கு ஏற்ப விசாரணைக்கு பட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டி நெறிமுறையை உருவாக்குவது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம்,

எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

எம்பி, எம்எல்ஏக்களுக்கு மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும்,

எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய உயர்நீதிமன்ற இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்