"கட்டாயப்படுத்திய பாஜக.." - காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு புகார்

Update: 2024-02-22 15:17 GMT

காங்கிரஸ் கட்சியின் சுமார் 66 கோடி ரூபாயை அரசுக்கு மாற்றும்படி பா.ஜ.க. கட்டாயப்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வைபோல் அல்லாமல் கட்சியின் சாதாரண ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் இது என்று தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, பிரதான எதிர்க்கட்சியின் கணக்கு பா.ஜ.க அரசால் அபகரிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்தியாவின் எதிர்ப்பின் குரலை மூட முயல்வதாகவும், இது சர்வாதிகாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்