அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதற்கு பொதுக்கூட்டம் நடத்தி வருத்தம் தெரிவித்த அதிமுக மா.செ.

Update: 2023-10-10 02:44 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து, பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக, கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறி இருந்தது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தனது வருத்தத்தை தெரிவித்து பேசினார். எந்த காலத்திலும் அதிமுக யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற வகையில் இருக்காது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்