ராகுல் காந்திக்கு மொத்த சொத்தையும் எழுதி வைத்த பாட்டி!

டேராடூனை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா மாஞ்சில், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

Update: 2022-04-05 08:09 GMT
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டேராடூனை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா மாஞ்சில், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக டேராடூன் நீதிமன்றத்தில் மூதாட்டி புஷ்ப தாக்கல் செய்துள்ள சொத்து உயிலில், ராகுல் காந்தியின் பெயரில் தனது சொத்துக்களுக்கான உரிமையை வழங்கி உள்ளார். ராகுல் காந்தியின் சிந்தனைகளால், தான் பெரிதும் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகவே தனது சொத்துக்களை அவரது பெயருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ள மூதாட்டி, ராகுல் காந்தியும் அவரது சிந்தனைகளும் நாட்டுக்கு தேவை என்று தெரிவித்துள்ளார். 50 லட்ச ரூபாய் சொத்துகள் மட்டுமின்றி 10 சவரன் மதிப்பிலான தங்க நகைகளையும் ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதியுள்ள மூதாட்டி இது தொடர்பான சொத்து ஆவணங்களை உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் ப்ரீதம் சிங்கிடம் வழங்கியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்