EB மூலம் மிரட்டி பணம் பறிப்பா? - நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய பரபரப்பு உத்தரவு

Update: 2024-09-28 14:13 GMT

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க தேசிய தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்