நாற்காலி சுயநலத்திற்காக நாட்டை பணயம் வைக்கும் சில அரசியல் கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரசும், சமாஜ்வாதியும், ஒசாமா போன்ற தீவிரவாதிகளை, மரியாதையுடன் அழைப்பதாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-02-21 04:42 GMT
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஹர்தோய் என்னும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, நாற்காலிக்காக குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சண்டை இடுபவர்கள், எந்த ஒரு சாதி அல்லது மதத்திற்கும் எதுவும் செய்ய மாட்டார்கள் என குறிப்பிட்டார். பாஜக அரசு, எந்த ஒரு குடும்பத்தையும் சார்ந்தது அல்ல எனவும், ஏழைகள் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான அரசு என குறிப்பிட்டார். சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 14 க்கும் மேற்பட்ட தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய பல்வேறு தீவிரவாதிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்