குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்... என்ன ஆனது? அந்த திக் திக் நிமிடங்கள்

Update: 2024-10-01 08:30 GMT

#gujarat | #floods

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்... என்ன ஆனது? அந்த திக் திக் நிமிடங்கள்

யாத்திரை சென்று திரும்பும் போது குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு, ரயில் மூலம் சென்னை திரும்பிய 26 பேரை, அமைச்சர் நாசர் வரவேற்றார். குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் சென்ற பேருந்து சிக்கியது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை, குஜராத் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, 26 பேரும்

ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அரசு சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்