காட்டுக்குள் சென்றவர்கள் எங்கே? களமிறங்கிய ஹெலிகாப்டர்கள்.. வயநாட்டில் தொடரும் பரபரப்பு

Update: 2024-08-03 15:21 GMT

கேரள மாநிலம் வயநாடு அடுத்த முண்டகை வனப்பகுதியில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல் பணி ஈடுபட்டுவருகின்றனர்.ஐந்தாவது நாளாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் சூழலில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலமாக வனப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். நில சரிவை கண்டு காட்டுக்குள் புகுந்து தப்பித்ததாக முகாமில் இருப்பவர்கள் தெரிவித்ததை அடுத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முகாமில் இருக்கும் நபர்கள் அளித்த தகவலின் படி அடர்ந்த வன பகுதியில் வழி தவறி சென்று இருப்பார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடும் பணியை தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்