வயநாடு கோரத்தால் பறிபோன உயிர்கள்..ஒரு நாளுக்கு 300 ரூபாய்.. அரசின் திடீர் முடிவு

Update: 2024-08-10 02:52 GMT

வயநாடு கோரத்தால் பறிபோன உயிர்கள்..ஒரு நாளுக்கு 300 ரூபாய்.. அரசின் திடீர் முடிவு

வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா அரசு உடனடியாக நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களில், வயது வந்தவருக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்நோயாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, மூன்று உறுப்பினர்களின் அடிப்படையில் இந்த உதவி தொகை வழங்கப்படும். இந்த தொகை 30 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. முகாமில் உள்ள குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்