இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக உபேந்திர திவிவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டாவின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், மத்திய அரசு நியமித்துள்ளது. 1964 ம் ஆண்டு பிறந்த உபேந்திரா திவிவேதி, 1984 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் இன்பான்ட் பிரிவில் பணியில் சேர்ந்ததும், தற்போது, இந்திய ராணுவத்தின் துணைத் தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.