டாடா பற்றி அறியப்படாத தகவல்.. நேரில் பழகிய கோவை வர்ம வைத்தியர் பகிர்ந்த சுவாரஸ்யம்

Update: 2024-10-13 05:47 GMT

#ratantata #tatadeath #ratantatalifestyle

ரத்தன் டாட்டாவிற்கு கோவை வைத்தியர் இலக்குமணன் மூட்டு மற்றும் முதுகு வலிக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன...

கோவை மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனியில் 3 தலை முறைகளாக வலி நீக்கு வைத்திய சாலை நடத்தி வருபவர் இலக்குமணன். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாட்டாவிற்கு மூட்டு மற்றும் முதுகு வலிக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு மறைந்த நிலையில், அவரின் எளிமையான குணங்களை குறிப்பிட்டு பலர் சமூக வலைதளத்தில் எழுதி வருகின்றனர். அந்த வகையில், முதுகு வலி, மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வர்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதை ஏற்று தனது மனைவி மனோன்மணியுடன் ரத்தன் டாடா இல்லத்திற்கு கடந்த 2019 நவம்பர் மாதம் சென்றிருந்ததாகவும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் வைத்தியர் இலக்குமணன்...

Tags:    

மேலும் செய்திகள்