தங்கக் குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா - பக்தர்களை கவர்ந்த நடனங்கள்

Update: 2024-10-12 06:42 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பாயும் தங்க குதிரையில் வீதியுலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான வெள்ளிக்கிழமை இரவு, மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பரதநாட்டியம், கோலாட்டம், ஒயிலாட்டம் நடனமாடி பக்தர்களை கவர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்