`Online Scam' 2 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால் 100% பணம் Return- கேரள காவல்துறை அதிரடி அறிவிப்பு

Update: 2024-07-04 10:18 GMT

கொச்சி நகர எல்லையில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மூலம் பலரிடம் சுமார் 25 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 4 வழக்குகளில் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் காவல் ஆணையர் ஷியாம்சுந்தர் தெரிவித்தார். ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 40 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் இழந்த தொகையில் 40 சதவீதம் வரை மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடி நடந்த 2 மணிநேரத்திற்குள் புகார் அளித்தல் 100 சதவீத பணத்தையும் திரும்ப பெற முடியும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்