"ப்ளீஸ்...சார்...எங்கள விட்டுப் போகாதீங்க..." - காலில் விழுந்து கதறிய மாணவர்கள்.. நெகிழ்ச்சி காட்சி

Update: 2024-06-29 11:29 GMT

பணியிட மாற்றத்தால் பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் ஆசிரியரை வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என மாணவர்கள் ஆசிரியரின் காலைப் பிடித்துக் கதறி அழுத நெகிழ்ச்சிகர சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

சூர்யா பேட்டை மாவட்டம் பூலமாலா கிராமத்தில் அமைந்துள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராகப் பணியாற்றியவர் சாய்ந்துலு... பணியிட மாற்றம் வழங்கப்பட்டதால் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் சாய்ந்தலு இனிப்புகள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்... தங்கள் அன்புக்குரிய ஆசிரியர் பிரிந்து செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத துயரத்தில் இருந்த குழந்தைகள் திடீரென அவரது காலைப் பிடித்து "எங்களை விட்டு செல்லாதீர்க" என கதறியழத் துவங்கினர்... இந்தக்காட்சிகள் காண்போரை நெகிழ வைத்தன...

Tags:    

மேலும் செய்திகள்