பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-07-17 17:00 GMT

கடந்த 2000ம் ஆண்டுகளில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர் தம்மிக நிரோஷனா... இலங்கை ஜூனியர் அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார். 41 வயதாகும் தம்மிக நிரோஷனா, கல்லே மாவட்டத்தில் உள்ள அம்பல்ங்கோடா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், தம்மிக நிரோஷனாவின் இல்லத்திற்குள் புகுந்த மர்ம நபர், அவரை சுட்டுக்கொன்றார். மனைவி, குழந்தைகள் முன்னிலையில் தம்மிகவை சுட்டுக்கொன்றுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடிய நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொன்ற மர்ம நபரை அந்நாட்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்