சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தி தேர்வு தேதி அறிவிப்பு

Update: 2024-09-19 16:04 GMT

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமையகத்தில் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், வரும் அக்டோபர் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில், குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுவர். இதற்காக, விண்ணப்ப‌தார‌ர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்ப‌ப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காத‌வர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Tags:    

மேலும் செய்திகள்