பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு.. நெடுநாள் கழித்து திறக்கப்பட்ட எல்லை

Update: 2024-07-10 15:37 GMT

விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட ஷம்பு எல்லையை திறக்குமாறு அரியானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிப்ரவரியில் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில், பஞ்சாப், அரியானா, டெல்லி, காஷ்மீரை இணைக்கு தேசிய நெடுஞ்சாலையில், சம்பு பகுதியில் முள்வேலிகளை அமைத்து அரியானா அரசு தடையை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே விவசாயிகள் போராட்டம் தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றம், எல்லைகள் எப்போதும் மூடியிருக்கக்கூடாது என உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை பஞ்சாப், அரியானா மாநில அரசுகள்தான் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், ஜனநாயக நாட்டில் விவசாயிகள் ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்துக்குள் செல்வதை தடுத்து நிறுத்த முடியாது எனவும் உத்தரவிட்டது...

Tags:    

மேலும் செய்திகள்