வேலை இழந்ததால் விரக்தி - இளைஞர் தற்கொலை முயற்சி

Update: 2024-10-22 02:50 GMT

நொய்டா, உத்தரப்பிரதேசம்

வேலை இழந்ததால் விரக்தி - இளைஞர் தற்கொலை முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் 12-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற இளைஞரை, அருகில் இருந்தவர்கள் பத்திரமாக காப்பாற்றினர். மாடியின் பால்கனி சுவரில் தொங்கியவாறு இளைஞர் கீழே குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த இளைஞரை பிடித்து இழுத்து, காப்பாற்றினர். அந்த இளைஞருக்கு அண்மையில் வேலை பறிபோனதாகவும், அதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்