#BREAKING || திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்! இடிந்து விழுந்த கட்டடம்! துடிதுடித்து பலியான 5 பேர்

Update: 2024-10-22 01:52 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இடிபாடுகளுக்குள் பலர் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வீட்டில் சுமார் 15 பேர் வசிக்கின்றனர்.

போலீசார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது

இந்த சம்பவம் செகந்திராபாத் மொஹல்லா ஆஷாபுரியில் நடந்துள்ளது.

இரவு எட்டு மணியளவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. சிலிண்டர் வெடித்ததால் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மற்றும் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இடிபாடுகளில் வேறு யாராவது இருக்கிறார்களா என, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்