ரவுடிகளை போல பள்ளி மாணவர்கள் -கொலை வெறி தாக்குதல்- ஊரே நின்று வேடிக்கை பார்த்த காட்சி

Update: 2024-09-16 04:40 GMT

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் ஒருவரையொருவர் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை வீடியோ எடுத்த நபருடன், செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமென மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்படவில்லை என வில்லியனூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்