பிரபல ரவுடியின் பெயரை சொல்லி நகைக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டல் - புதுச்சேரியில் அதிர்ச்சி

Update: 2024-02-01 02:07 GMT

புதுச்சேரியில் நகைக்கடை உரிமையாளருக்கு மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த ரவுடி குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்

தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் சிறையில் உள்ள பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளி எனக் கூறி 5 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ரமேஷ், காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்