அதிர வைத்த MBBS வினாத்தாள் கசிவு... முதல்வர் ரங்கசாமி சொன்ன வார்த்தை'... பரபரத்த அவை

Update: 2024-08-05 16:08 GMT

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தனக்கு தெரியவில்லை என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு குறித்து அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்த தகவல் தனக்கு தெரியவில்லை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி முழு விவரம் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்