பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டம்.. கூடிய முக்கிய தலைவர்கள் | BJP | PM Modi

Update: 2024-10-18 02:10 GMT

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டம்.. கூடிய முக்கிய தலைவர்கள் | BJP | PM மோடி

சண்டிகரில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பங்கேற்றனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி முதல்வர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் அரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருப்பதற்கு நயாப் சிங் சைனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக தேசிய அளவிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மிக துரிதமாக முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது

Tags:    

மேலும் செய்திகள்