படையெடுத்த சேட்டன் சேச்சிகள்... குருவாயூராக மாறிய சென்னை மகாலிங்கபுரம்... களைகட்டிய ஓணம்

Update: 2024-09-15 10:05 GMT

ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், மலையாள மொழி பேசும் மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக, கோயில் உள்ளே அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் அசத்தினர். ஐயப்பன் மற்றும் குருவாயூரப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இருமுடி கட்டி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வதை விசேஷமாக கருதும் பக்தர்கள் ஏராளமானோர், இருமுடி கட்டிக்கொண்டனர். கோயில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்