பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ரெட் அலர்ட் - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2024-07-25 15:04 GMT

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை பல்கலைக்கழகம் இன்று அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்ட்ராவில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வந்தடைய ஏர் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்