விமானமாக மாறிய அரசு பஸ்கள்.. பயணிகளை கவர பணிப்பெண்கள்.. MH அரசு கொண்டு வந்த திட்டம்

Update: 2024-10-04 04:34 GMT

மகாராஷ்டிராவில் உள்ள அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டெஸ் போன்ற பணிப்பெண்களை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விமானங்களில் இருக்கும் CABIN CREW போல பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவரும் வகையில், இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை - புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில், ஷிவ்நேரி சுந்தரி என்ற பெயரில் பணிப் பெண்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்