தமிழகத்திற்கு பேரதிர்ச்சி.. நிலச்சரிவில் சிக்கிய 30 பேர்.. கோர வீடியோ

Update: 2024-09-15 02:51 GMT

உத்தரகாண்டில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேட்டால்கோட் பகுதிக்கு அருகே உள்ள தார்ச்சுலா என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்