நாடே திரும்பி பார்த்த ஒரு நிச்சயதார்த்தம்.. 5 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த திருநங்கை

Update: 2024-09-08 07:52 GMT

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீமா வினித். பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான இவருக்கும், நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக, சீமா வினித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் பிரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், தங்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்கள் மற்றும் நண்பர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்